சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது சுங்கை துவா இருக்கையை மும்முனை போட்டியிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ளார்.
சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவருமான அமிருடின், பெரிகாத்தான் நேஷனலின் ஹனிப் ஜமாலுதீன் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சுமன் கோபால் ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுவார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதன்முறையாக பத்து மலை பகுதியில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அவ்வாண்டு அத்தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த 14வது பொதுத் தேர்தலின்போது பத்து மலை சட்டமன்றத்தொகுதியின் பெயர் சுங்கை துவா என பெயர் மாற்றம் பெற்றது என்பது நினைவுகூறத்தக்கது.