உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சராக டத்தோ அர்மிசான் முகமட் அலி தற்காலிகமாகப் பொறுப்பேற்பார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 23 அன்று, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் காலமானதால், அந்த அமைச்சுப் பதவியை டத்தோ அர்மிசான் ஏற்பார் என்று அன்வார் கூறினார்.
“மாநில தேர்தலுக்குப் பிறகு, இது தொடர்பில் சிந்திக்க எனக்கு சிறிது நேரம் கொடுங்கள் என்றும், அதுவரையில் (சலாஹூடினின்) கடமைகளை கண்காணிக்கவும் நிறைவேற்றவும் அர்மிசானுக்கு பொறுப்பு வழங்கப்படுகிறது” என்று அன்வர் கூறினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) புக்கிட் ஜாலீல் பெவிலியனில் நடந்த ரஹ்மா முன்முயற்சி நிகழ்வின் போது அன்வார் இவ்வாறு கூறினார்.