LRT நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மனநல சிகிச்சை பெறுகிறார் -காவல்துறை

கோலாலம்பூர், ஜூலை 31:

நேற்று செராஸ், மலூரி LRT நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் , கோலாலம்பூர் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வருவதாக, கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், கோலாலம்பூர் காவல் படைத் தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

உள்ளூர் பெண் ஒருவரிடமிருந்து காலை 8.40 மணியளவில் சம்பவம் குறித்த புகாரைப் பெற்ற பின்னர், சந்தேக நபரை போலீசார் கண்காணித்து வருவதாக, செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜாம் ஹலீம் ஜமாலுதீன்,உறுதிப்படுத்தினார்.

நேற்று வெள்ளிக்கிழமை, இங்குள்ள மலூரி LRT நிலையத்தில் காலை 7.58 மணியளவில் நடந்த சம்பவத்தில் , முதலாவது பிளாட்பார்மிலிருந்து எதிரேயிருந்த இரண்டாவது பிளாட்பார்மிற்கு வந்த சந்தேகநபர், பெண் ஒருவரைக் திடீரென பின்னாலிருந்து கட்டிபிடித்தார்.

இருப்பினும், அந்த இடத்தில் இருந்த பொதுமக்களின் விரைவான நடவடிக்கையால், குறித்த பெண்ணைக் காப்பாற்ற முடிந்தது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வலைத்தளவாசிகளின் கோபத்தையும் வெறுப்பையும் பெற்றுவருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here