திடீரென ஏற்பட்ட தீயில் 3 கார்கள் சேதம்- கம்போங் சுங்கை பென்சாலாவில் சம்பவம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 6:

நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) ஜாலான் புக்கிட் லஞ்சான், கம்போங் சுங்கை பென்சலாவில் மூன்று கார்கள் தீயில் எரிந்து நாசமானது.

குறித்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு துறையின் செயல்பாட்டு அறைக்கு காலை 11.17 மணிக்கு பேரிடர் அழைப்பு வந்தது என்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி, நூர் பைசல் முகமட் நூர் கூறினார்.

தகவல் கிடைக்கப்பெற்றதும், “தாமன் துன் டாக்டர் இஸ்மாயில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆறு தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரம் அனுப்பப்பட்டது என்று, இன்று வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் நூர் பைசல் கூறினார்.

“மூன்று கார்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானதை நாங்கள் கண்டுபிடித்தோம். காலை 11.55 மணியளவில் எங்களால் தீயை முழுமையாக அணைக்க முடிந்தது, மேலும் சின்ஹா சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பிரிக்ஃபீல்ட்ஸ் OCPD துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர், சம்பவ இடத்தில் வேறு யாரும் வேண்டுமென்றே தீ வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here