மீன் பிடிக்க கடலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

நிபோங் தெபால், புலாவ் அமான், பத்து கவான் என்ற இடத்தில் இன்று மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் விழுந்து மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். 28 வயதான முகமது அசாலி முகமட் அஸ்ரி, 11.42 மணியளவில் நீரில் விழுந்து பலியானதாக பது கவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கை அதிகாரி அஸ்மி தஹார் தெரிவித்தார்.

அவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 4.8 கிலோமீட்டர் தொலைவில் மாலை 4.14 மணியளவில் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு நாங்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டோம் என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார். போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் சடலம் பத்து முசாங் ஜெட்டிக்கு கொண்டு வரப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here