கிளந்தானின் புதிய மந்திரி பெசாராக முகமட் நஸ்ருடின் பதவியேற்றார்

கோத்தா பாரு, ஆகஸ்ட்டு 15:

கிளந்தானின் 9வது மந்திரி பெசாராக மெராண்டி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நஸ்ருடின் தாவுட் இன்று பதவியேற்றார்.

58 வயதான முகமட் நஸ்ருடின், குபாங் கெரியானில் உள்ள இஸ்தானா நெகிரியில், கிளந்தான் மாநில ஆட்சியாளர் சுல்தான் முஹமட் V முன்
நிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த பதவியேற்பு விழாவில், டத்தோ டாக்டர் முஹமட் ஃபட்ஸ்லி ஹாசன், கிளந்தானின் புதிய துணை மந்திரி பெசாராகவும் பதவியேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here