12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 இளைஞர்களுக்கு தடுப்புக்காவல்

ஜோகூரில் உள்ள பத்து பஹாட்டில் 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று இளைஞர்களை தடுப்புக்காவலில் வைக்க  பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. நேற்று அதிகாலை 3.35 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், 18 முதல் 20 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ஹரியான் மெட்ரோவின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமூக ஊடகங்கள் மூலம் பழகியுள்ளனர். பத்து பஹாட் காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் டோல்லா, கூட்டுப் பலாத்காரத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 375 பி பிரிவின் கீழ் விசாரணைக் கட்டுரை திறக்கப்பட்டுள்ளது என்றார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here