தாவாவில் 1.9 கிலோ சியாபுவுடன் ஆடவர் கைது

தாவாவ், ஆகஸ்ட்டு 18 :

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 16) கலாபாக்கானில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் RM120,000 மதிப்புள்ள 1.917 கிலோகிராம் சியாபு வைத்திருந்த, போதைப்பொருள் கடத்தல் கும்பலின் உறுப்பினர் என நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

36 வயதுடைய சந்தேக நபர், ஒரு முதுகுப்பையை மாட்டியபடி, சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதாகவும், மாலை 4 மணியளவில் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை குழுவின் சோதனையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், தாவாவ் காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறினார்.

“அவரது பையில் சியாபு என நம்பப்படும் இரண்டு பிளாஸ்டிக் பைகள் இருந்தன. மேலும் அந்த நபரிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்றும், சந்தேக நபர் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் இன்று (ஆகஸ்ட் 18) நடந்த செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மேலும் இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here