ஹெரோயின் பதப்படுத்தும் ஆய்வகம் கண்டுபிடிப்பு; RM5.78 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட்டு 18:

இந்த வார தொடக்கத்தில் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் போலீசார் சட்டவிரோத ஹெரோயின் பதப்படுத்தும் ஆய்வகத்தை கண்டுபிடித்தனர், அத்தோடு RM5.78 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் தாய்லாந்தில் இருந்து மலேசியாவிற்கு ஹெரோயின் கடத்தும் நிறுவனத்தையும் போலீசார் முடக்கியதாக,மத்திய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் கமருடின் எம்.டி.டின் கூறினார்.

42 மற்றும் 46 வயதுடைய வேலையில்லாத இருவர் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணி முதல் மறுநாள் வரை இரண்டு சோதனைகளை பொலிஸார் மேற்கொண்டதாக அவர் கூறினார். முதல் சோதனையில், துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலையில் வாகனம் ஓட்டிய முதல் சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அல்மா, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரின் வாகன நிறுத்துமிடத்தில், இரண்டாவது சந்தேக நபரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

குறித்த இருவரையும் கைது செய்ததன் மூலம், தஞ்சோங் டோகாங்கில் உள்ள ஒரு குடியிருப்புக்கு காவல்துறை அழைத்துச் சென்றதாக கமாருடின் கூறினார், அந்த வீடு ஹெரோயின் செயலாக்க ஆய்வகமாக பயன்படுத்தப்பட்டது என்றும், 42 வயதான சந்தேக நபர் ஹெரோயின் சமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கும்பலில் மீதமுள்ள உறுப்பினர்களை நாங்கள் இன்னும் கண்காணித்து வருகிறோம் என்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குறித்த கும்பல் செயல்படுவதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று மாநில காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 65.38 கிலோ ஹெரோயின் மூலப்பொருள் (base), 13.62 கிலோ ஹெரோயின் மற்றும் 8.48 கிலோ காஃபின் பவுடர், இவை அனைத்தும் 5.78 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ளவை என்று கமாருடின் கூறினார்.

இந்த வழக்கு ஆபத்தான மருந்து சட்டம் 1952 பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here