பூலாய், சிம்பாங் ஜெராம் இடைத்தேர்தலில் மூடா போட்டியிடவில்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 21:

ஜோகூரில் நடைபெறவுள்ள பூலாய் நாடாளுமன்ற மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்க மூடா கட்சி முடிவு செய்துள்ளது.

நாட்டிற்கு பெரும் பங்காற்றிய சிறந்த நபரான மறைந்த டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் அவர்களது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரு இடங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மூடா போட்டியிடாது, மறைந்த டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப்பிற்கு மரியாதை செலுத்தும் முகமாக, தேர்தலை புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக, மூடாவின் அரசியல் பணியகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 26ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்களிக்க செப்டம்பர் 5ஆம் தேதியும், இரு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 9ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here