கிள்ளானில் உள்ள மறுசுழற்சி மையத்தில் கம்பேக்டரில் சிக்கி வெளிநாட்டு தொழிலாளி பலி

கிள்ளான்:

இங்குள்ள மறுசுழற்சி மையத்தில், கம்பேக்டரில் சிக்கிய வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 23) மதியம் 1.51 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அகமட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

உடனே சுங்கை பினாங் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஆறு பணியாளர்களையும் ஒரு தீயணைப்பு வாகனத்தையும் சம்பவ இடத்திற்கு அனுப்பினோம்.

“அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, 19 வயதுடைய வங்காளதேச இளைஞர் ஒருவர் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டதைக் கண்டதாகவும், பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்றும் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடலை இயந்திரத்திலிருந்து அகற்றி, அடுத்த நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சக அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here