வீட்டில் ஏற்பட்ட தீயில் 81 வயது முதியவர் பலி

தங்காக், புக்கிட் கம்பீர், கம்போங் சுங்கை பிலாவில் உள்ள  வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 81 வயது முதியவர் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 6.16 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக தங்காக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி ரஃபியா அஜீஸ் தெரிவித்தார்.

இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் மொத்தம் 16 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  வீடு ஏற்கெனவே 80% தீயில் எரிந்து நாசமாகிவிட்டது, காலை 6.54 மணிக்கு நாங்கள் அதை அணைக்க முடிந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

வீட்டைச் சோதனையிட்டதில் முதியவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். மருத்துவக் குழுவால் அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார் என்று அவர் கூறினார். தீக்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தங்காக் துணைத்தலைவர்டி எஸ்பி இட்ரிஸ் அப்துல் ரஹ்மான், இந்த வழக்கு குறித்து காவல்துறைக்கு அறிக்கை கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here