நாட்டின் புதிய சட்டத்துறைத் தலைவராக அஹ்மாட் தெருடின் சாலே (Ahmad Terrirudin Salleh) நியமிக்கப்பட்டுள்ளார். தெருடினின் நியமனம் செப்டம்பர் 6 ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜூஸு அலி ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நடப்பு சட்டத்துறைத் தலைவராக இட்ரிஸ் ஹருனின் ஒப்பந்தம் செப்டம்பர் 5ஆம் தேதி முடிவடைகிறது. இட்ரஸ் ஹருனின் பதவிக் காலத்தில் அவர் ஆற்றிய சேவைகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்று ஜூஸு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.