ஒற்றுமை அரசிலிருந்து விலகுகிறாரா சைட் சாடிக்?

துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியின் சமீபத்திய ஊழல் வழக்கு விசாரணையின் முடிவுகளில் பொதுமக்கள் அதிருப்தி அடைந்ததைத் தொடர்ந்து, முவார் எம்பியும் மூடாவின் தலைவருமான சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான்,  அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத முடா பிரிவுத் தலைவர் ஒருவர் எப்ஃஎம்டியிடம், கட்சி மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தாது என்றும், ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறும் என்றும் கூறினார்.

12ஆவது மலேசியத் திட்டத்தின் இடைக்கால மறுஆய்வு குறித்து விவாதிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தில் நாளை நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், சைட் சாதிக் இன்று பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here