பெட்டாலிங் ஜெயா:
20 வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மலேசிய பலாப்பழங்கள் (நாங்கா) சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக துணை வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் சான் ஃபூங் ஹின் தெரிவித்தார்.
இவ்வாண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி சீனாவுடன் புதிய பலாப்பழ ஏற்றுமதி ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திட்டதாக அவர் கூறினார்.
பலாப்பழத்தின் முதல் தொகுதி அடுத்த வார இறுதியில் சீனா சென்றடையும் என்றும், செப்டம்பர் 16 முதல் 19 வரை நானிங்கில் நடைபெறும் சீனா-ஆசியான் கண்காட்சியில் அவை காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.