ஷா ஆலமில் விமான விபத்தில் உயிரிழந்த உணவு விநியோகஸ்தரின் குடும்பத்திற்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஃபுட்பாண்டா மலேசிய செய்தித் தொடர்பாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, கெடாவில் உள்ள சுங்கைப்பட்டானியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் சலேயின் குடும்பத்தினர் இந்த நிதியைப் பெற்றதாகக் கூறினார்.
காப்பீட்டுக் கோரிக்கை செயல்முறையை முடித்துவிட்டதாகவும், நிதி வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்க வியாழக்கிழமை (செப்டம்பர் 14) குடும்பத்தைச் சந்தித்தோம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பணியில் இருக்கும் போது விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், நிறுவனத்தின் டெலிவரி பார்ட்னர்கள் RM100,000 வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 17 அன்று ஷா ஆலமில் உள்ள கத்ரி நெடுஞ்சாலையில் நடந்த விமான விபத்தில் இறந்த இரண்டு சாலை பயனாளர்களில் முஹமட் ஹபீஸும் ஒருவர்.
லங்காவியில் இருந்து புறப்பட்ட விமானம் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்த விரைவில் பெர்சியாரன் எல்மினா மீது மோதியது. பெலங்காய் மாநில சட்டமன்ற உறுப்பினரும், பகாங் நிர்வாக குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருன் இறந்தவர்களில் அடங்குவர். இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஷரிபுதீன் ஷாரி என்பவர் கொல்லப்பட்ட மற்றைய வாகனமோட்டி ஆவார்.








