கோலாலம்பூர்: இந்த ஆண்டு மலேசியா தின கொண்டாட்டத்தையொட்டி, 421 மீட்டர் உயர கோபுர KL Towerஇல் பிரமாண்டமான தேசியகொடி ஏற்றப்பட்டது. சுமார் 1,737 சென்டிமீட்டர் (செ.மீ.) அகலமும், 3,747 செ.மீ உயரமும் கொண்ட இந்த ராட்சத கொடி புதன்கிழமை முதல் கேஎல் டவரின் ஆண்டெனாவில் நிறுவப்பட்டுள்ளது.
மெனரா கோலாலம்பூர் சென்.பெர்ஹாட் ஒரு அறிக்கையில், “Giant Jalur Gemilang” திட்டம், நாட்டில் உள்ள மக்களிடையே தேசபக்தியின் உணர்வை தூண்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளில் ஒன்றாகும்.