கோலாலம்பூர்: கிழக்கு சபாவின் கடல் பகுதியில் இன்று பிற்பகல் 2.38 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவான பலவீனமான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது. மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) நிலநடுக்கத்தின் மையம் 7.0 டிகிரி வடக்கு மற்றும் 117.8 டிகிரி கிழக்கில் 67 கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் இருந்தது.
இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் பலவானில் இருந்து தெற்கே 331 கிமீ தொலைவிலும், பிடாஸ், சபாவில் இருந்து வடகிழக்கே 81 கிமீ தொலைவிலும் கண்டறியப்பட்டது. மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. மேலும் மெட்மலேசியா இந்த நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்று துறை முகநூலில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.