75 வயதான மோட்டார் சைக்கிளோட்டி சாலை விபத்தில் மரணம்

 ­சிம்பாங் ரெங்கம்: இங்கு அருகே ஜாலான் சிம்பாங் ரெங்கம், ஜாலான் பத்து 47 என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியதில் 75 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். ரெங்கம் தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் நிசார் மாமுன் கூறுகையில், புதன்கிழமை (அக் 4) பிற்பகல் 2.57 மணிக்கு இந்த சம்பவம் குறித்து நிலையத்துக்கு அவசர அழைப்பு வந்தது.

உரத்தை ஏற்றிச் சென்ற லோரிக்கும், பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளுக்கும் இடையே இந்த விபத்து நடந்துள்ளது என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஆயர் ஈத்தாமில் இருந்து சிம்பாங் ரெங்கம் நோக்கி வந்து கொண்டிருந்த போது சிம்பாங் ரெங்கமிலிருந்து ஆயர் ஈத்தாம் நோக்கி லோரி பயணித்ததாக முகமட் நிசார் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரியால்  மூசா அவாங் என அடையாளம் காணப்பட்டவர் இறந்துவிட்டதாக முகமட் நிசார் கூறினார். 32 வயதான லோரி ஓட்டுநர் முஹம்மது நோர் சஃபீக்ஸ் ஜகாரியா காயமின்றி தப்பினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று முகமட் நிசார் கூறினார். ரெங்கம் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி II நோரிசம் இஹ்வான் மற்றும் ஏழு தீயணைப்பு வீரர்கள் தலைமையிலான நடவடிக்கை பிற்பகல் 3.37 மணிக்கு முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here