தாய்லாந்து பிரதமர் 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியா வந்தடைந்தார்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தனது இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியாவிற்கு  இன்று புதன்கிழமை (அக் 11) வந்தார். இது செப்டம்பர் 5 ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பிறகு தனது முதல் பயணத்தைக் குறிக்கிறது. ஸ்ரேத்தா மற்றும் தாய்லாந்தின் மூத்த அதிகாரிகளுடன் சிறப்பு விமானம் காலை 11.15 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) பூங்கா ராயா வளாகத்தைத் தொட்டது.

ஸ்ரேத்தாவை வரவேற்க வந்தவர்களில் துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமட் அலமின் மற்றும் மலேசியாவுக்கான தாய்லாந்து தூதர் லடா புமாஸ் ஆகியோர் அடங்குவர். கேப்டன் ராஜா அஸ்ரி சியாஹிர் ராஜா முகமட் சுல்கிஃப்ளி தலைமையிலான ராயல் ரேஞ்சர் படைப்பிரிவின் (சம்பிரதாய காலாட்படை) முதல் பட்டாலியனைச் சேர்ந்த 28 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அணிவகுத்துச் சென்ற ஸ்ரேத்தாவை வரவேற்றனர்.

இன்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவை ஸ்ரேத்தா  சந்திக்க திட்டமிட்டுள்ளார். மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் அவர் சந்திக்க உள்ளார். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு, வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில், தாய்லாந்து உலகளவில் மலேசியாவின் ஏழாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், ஆசியான் உறுப்பு நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாகவும் இருந்தது. மொத்த வர்த்தகம் RM122.03பில்லியன் (US$27.75பில்லியன்), RM97.55பில்லியன் (US$23.54 பில்லியன்) 2021ஆண்டோடு  ஒப்பிடும்போது 17.9% அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here