உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிளோட்டி சென்ற 14 வயது சிறுவன் விபத்தில் பலி

கூலிம்-பாலிங்-கெரிக் டிரங்க் சாலை சந்திப்பில், செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 14 வயது பள்ளிச் சிறுவன், லோரி மீது மோதிய விபத்தில் உயிரிழந்தார். மதியம் 1.50 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முஹம்மது ஹாசிம் இஸ்கந்தர் முகமட் ஹபீஸ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குபாங்கில் உள்ள SMK Jerai பள்ளியின் இரண்டாம் படிவ மாணவர், சம்பவத்தின் போது பள்ளியிலிருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் ஷம்சுதின் மாமத் தெரிவித்தார். லோரி கெரிக்கில் இருந்து கூலிம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்தவுடன், மோட்டார் சைக்கிள் சந்திப்பின் இடது பக்கத்திலிருந்து வெளியேறி, லாரியின் பின்-இடது பக்கம் மோதியது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையில் விழுந்து, லோரியின் பின்-இடது டயரால் அவரது தலை நசுக்கப்பட்டது. இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். லோரி ஓட்டுநர் முஹம்மது அஸ்ரோய் அஸ்லீ முகமட் அகிப் 31, மற்றும் உதவியாளர் லிசா அப்துல் ரஹீம், 27, ஆகியோர் காயமின்றி இருப்பதாக ஷம்சுதீன் கூறினார்.

மோட்டார் சைக்கிளின் சாலை வரி காலாவதியாகிவிட்டதாகவும் சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இறந்தவரின் கவனக்குறைவாக பயணித்ததால் விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கூலிம் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here