மின்சாரம் தாக்கி ஆடவர் பலி

மாச்சாங்: 54 வயது ஆடவர் இன்று தனது வீட்டைப் புதுப்பிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மாலை 5 மணியளவில் லபோக் அருகே கம்போங் டோக் கயாவில் இந்த சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர் வீட்டின் கூரையில் தனியாக இருந்தார்.

மாலை 5.18 மணியளவில் அவசர அழைப்பு வந்ததையடுத்து, மாவட்ட நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடம் எடுத்து கூரையில் இருந்து பாதிக்கப்பட்டவரை கீழே இறக்கினர்.

பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here