பெட்டாலிங் ஜெயா:
இன்று, கிள்ளான் நோக்கி செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையின் 30.4 ஆவது கிலோமீட்டரில் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு காலை 8.52 மணிக்கு தகவல் கிடைத்தது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட துணை போலீஸ் தலைவர் எம் ஹுசின் சொல்லுடின் சுல்கிஃப்லி தெரிவித்தார்.
“முதற்கட்ட விசாரணையில் காலை 8 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாகக் கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டநபர் சாலையைக் கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதாகத் தெரிகிறது.
“இந்த மோதலால் பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.