தொழிற்சாலையிலிருந்து முதலாளியின் தங்க நூலை திருடிய நபருக்கு ஒரு வாரம் சிறை!

மலாக்கா :

டந்த செப்டம்பர் மாதம், தனது முன்னாள் முதலாளியின் தங்க நூலைத் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட தொழிற்சாலை நடத்துனருக்கு, மலாக்கா மாவட்ட நீதிமன்றம் இன்று ஒரு வார சிறைத் தண்டனையும், RM2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டவுடன், குற்றம் சாட்டப்பட்ட முஹமட் ஷாருல் ஹெல்மி ரம்லி, 34, என்பவரின் வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர், மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி இந்த தீர்ப்பை வழங்கினார்.

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் தனது முதலாளியின் அனுமதியின்றி சுமார் RM4,000 மதிப்புள்ள தொழிற்சாலைக்கு சொந்தமான தங்க நூலை மோசடியாக திருடினார்.

இக்குற்றம் கடந்த செப்டம்பர் 10, 2023 அன்று மலாக்கா தெங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மாலை 6 மணியளவில் நடந்தது.

குற்றவியல் சட்டத்தின் 381வது பிரிவின்படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

இவ்வழக்கில் குற்றவாளி 19 டிசம்பர் 2023 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரச் சிறைத்தண்டனையும், செலுத்தத் தவறினால் RM2,000 அபராதமும் அல்லது இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் அவருக்கு நீதிமன்றம் விதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here