கோலாலம்பூர்:
சரவாக்கில் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) மற்றும் ஜோகூரில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13-14) வரை தொடர் மழை பெய்யும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சரவாக்கில் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெத்தாங், சரிகேய் மற்றும் முக்கா ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்றும், ஜோகூரில் குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த காலப்பகுதியில் ஆறு மணி நேரத்திற்கு மேல் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதால் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்று அது வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
புதுப்பித்த மற்றும் உண்மையான தகவலுக்கு எப்போதும் https://www.met.gov.my என்ற இணையத்தளத்தை பார்க்குமாறும், மற்றும் MetMalaysia இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மற்றும் myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அது மேலும் தெரிவித்தது.