ஜார்ஜ் டவுன்:
இன்று மாலை 7 மணி நிலவரப்படி, பினாங்கில் நீர் தடை நிலவிவந்த இடங்களில் 90.4 விழுக்காடு அதாவது சுமார் 533,000 நுகர்வோருக்கு நீர் விநியோகம் வஹ்ஸ்மைக்கு திரும்பியது என்று பினாங்கு நீர் வழங்கல் கழகம் (PBAPP) தெரிவித்துள்ளது.
“நேற்று சுங்கை பிறை அருகே பிரதான குழாயில் ஏற்பட்ட புதிய கசிவால் கணிசமான அளவு நீர் இழப்பு ஏற்பட்டாலும், சுங்கை துவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தீவுப் பகுதிக்கு PBAPP தொடர்ந்து தண்ணீரை பம்ப் செய்கிறது,” என்று தெரிவித்தது.
பினாங்கு முழுவதும் கடந்த புதன்கிழமை (ஜனவரி 10) காலை 6 மணிக்குத் தொடங்கி இன்று வரை நீர் விநியோகத்தடை அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.