பெனாம்பாங்:
ஜாலான் பெனாம்பாங் பாருவில் நேற்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 50 தொழிலாளர்களின் வீடுகள் எரிந்து நாசமானது.
எவ்வாறாயினும், இவ்விபத்தில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று பெனாம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர, ஜீனோ திங்கலான் கூறினார்.
மாலை 4.52 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அவரது துறைக்கு அழைப்பு வந்தது என்றும், உடனே பெனாம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இயந்திரங்களுடன் 14 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழு மாலை 4.52 மணிக்கு அழைப்பு வந்தவுடன் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று அவர் கூறினார்.
“ஒரு தொகுதியில் 10 கதவுகள் கொண்ட தொழிலாளர்களின் வீடுகளில் மொத்தம் ஐந்து தொகுதிகள் தீயில் எரிந்தன.
“தீ அணைப்பு நடவடிக்கைக்கு கோத்தா கினாபாலு தீயணைப்பு நிலையத்தினரும் உதவினர்” என்றும், நேற்று மாலை 5.50 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்றும், மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் அவர் சொன்னார்.