ஈப்போ:
நேற்று (ஜனவரி 15) கோவிலுக்கு சென்றபோது, சிம்பாங் பூலாயில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் முன் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால், 30 வயதுடைய இரண்டு பெண்கள் தங்கள் காரில் சிக்கிக்கொண்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரவு 7.46 மணியளவில் ஒரு அழைப்பு வந்ததையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
“இரவு 8.01 மணிக்கு குழுவினர் குறித்த இடத்திற்கு வந்தவுடன், பெட்ரோல் நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள சாம் போ தோங் கோவிலுக்கு அருகில், இரண்டு பெண்களுடன் வெள்ளத்தில் சிக்கிய காரைக் கண்டனர்,” என்று அவர் கூறினார்.
தீயணைப்பு வீரர்கள் காரை வெள்ளத்தில் இருந்து வெளியே தள்ளினர் என்றும், பாதிக்கப்பட்ட இருவரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் காயமின்றி இருப்பதாகவும் அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.