பொது இடத்தில் சண்டை; இருவர் கைது!

ஷா ஆலம்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள பிரிவு 28 இல் பொது இடத்தில் சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று அதிகாலை 3.36 மணியளவில் 19 மற்றும் 25 வயதுடைய இருவரையும் கைது செய்ததாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடைப்பந்து மைதானத்திற்கு அருகில் இருந்தபோது, தான் தாக்கப்பட்டதாகக் கூறி 19 வயது இளைஞர் அளித்த புகாரைத் தொடர்ந்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அன்றைய தினம் இரவு 7.05 மணியளவில் சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து போலீசாருக்கு மற்றுமொரு தகவல் கிடைத்தது, அவர் காயமடைந்தவரை தாக்கியதாக அவர் தெரிவித்தார்.

“சந்தேக நபர்களில் ஒருவர் தனது சகோதரியுடனான உறவைத் தொடரவிடாமல் பாதிக்கப்பட்டவர் தடுத்ததால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.

“அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க உதவுவதற்காக முதல் புகார்தாரர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

“இரண்டு சந்தேக நபர்களும் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் வழக்குகளின் கடந்தகால பதிவுகளையும் கொண்டுள்ளனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் 148 வது பிரிவின் கீழ், மேலதிக விசாரணைக்காக இருவரும் வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here