ஜோகூர் பாரு:
மாசாய், பிளென்டாங் தொழிற்பேட்டையில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், மானிய விலை டீசல் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 4 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 81,400 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.
இரவு 9.30 மணியளவில் நடந்த சோதனையில், 32 முதல் 43 வயதுக்குட்பட்ட 4 பேரும் ஒரு தொட்டியிலிருந்து டீசலை லோரிக்கு மாற்றிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்று, ஜோகூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் எம் குமார் கூறினார்.
குறித்த வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 81,400 லிட்டர் எரிபொருளைக் கொண்ட நான்கு ஸ்கிட் டேங்குகள் மற்றும் மூன்று ஐபிசி டேங்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
நான்கு சந்தேக நபர்களில் இருவர் கடந்த கால குற்றப் பதிவுகளைக் கொண்டிருப்பதை சோதனையில் கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு விநியோக கட்டுப்பாடு சட்டம் 1961 பிரிவு 21ன் படி விசாரிக்கப்பட்டு வருகிறது.