அமோனியா வாயு கசிவு; மருத்துவமனைக்கு விரைந்த 10 பேர்

ஷா ஆலம்  புக்கிட் ராஜா தொழிற்பேட்டை, செக்‌ஷன் 7 இல் உள்ள ஒரு தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் 10 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறுகையில், காலை 11.15 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட தீயணைப்பு வீரர்கள் எரிவாயு சேமிப்பு தொட்டி வால்வில் இருந்து அமோனியா வாயு கசிவதைக் கண்டறிந்தனர்.

20 மற்றும் 30 வயதுடைய எட்டு பெண்களும் இரண்டு ஆண்களும் மேலதிக சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார். கசிவு வால்வை சரிசெய்யும் பணி அபாயகரமான இரசாயன சிறப்புக் குழுவால் (ஹஸ்மத்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here