கிள்ளான் ஆற்றில் நீர் குழாய் அருகே அடையாள ஆவணங்கள் இல்லாத உள்ளூர் ஆடவரின் சடலம் மிதந்தது. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) ஒரு அறிக்கையில், சுபாங் ஜெயா OCPD உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமத், சனிக்கிழமை (மார்ச் 9) காலை 9.01 மணிக்கு இந்த சடலம் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.
ACP வான் அஸ்லான் மேலும் கூறுகையில், புக்கிட் தண்டாங் முஸ்லிம் கல்லறைக்கு அருகில் உள்ள கிள்ளான் ஆற்றின் அருகே உள்ள தண்ணீர் குழாய்க்கு அருகில் பொதுமக்கள் சடலத்தைக் கண்டனர். அந்த நபர் கருப்பு பெல்ட் மற்றும் அவரது இடது கையில் கருப்பு கடிகாரத்துடன் நீல நிற டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார் என்பது சோதனையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
கன்னத்தில் காயங்கள் மற்றும் இரு கைகளிலும் சிராய்ப்புகள் காணப்பட்டதை தடயவியல் போலீசார் உறுதிப்படுத்தினர். அதே போல் இடது விலா எலும்பில் காயங்கள் காணப்பட்டன. சம்பவ இடத்திற்கு அருகில் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். பிரேத பரிசோதனையின் முடிவுகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போதைக்கு இந்த வழக்கு திடீர் மரண அறிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ACP வான் அஸ்லாம் உறுதிப்படுத்தினார்.








