ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் 15ஆவது பட்டமளிப்பு விழா: 642 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

துன் சாமிவேலுவின் அயராத முயற்சியில் உருவான ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் 642 மாணவர்கள் இன்று பட்டம் பெற்றனர். ஏய்ம்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் உள்ளிட்ட உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை எடுத்து வழங்கினர்.

பவித்ரா கோனார்சிகரன்: கம்பாரை சேர்ந்த இவர் பல் மருத்துவத் துறையில் கல்வி பயின்று சிறந்த மாணவிக்கான தங்க விருதுனை பெற்றுள்ளார். தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலால் இத்துறையை தேர்வு செய்தேன். ஆனால் 2 வருடத்திற்கு பிறகு என் தந்தை எனக்கு தேர்வு செய்தது சரியான துறை என்பதனை புரிந்து கொண்டேன் என்றார்.

 

கோசபூரணி புஷ்பநாதன் நிதித் துறை தனது பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். சிறு வயதில் இருந்து கணக்கு பாடத்தில் தனக்கு ஆர்வம் இருந்ததால் தான் இத்துறையை தேர்வு செய்ததாகக் கூறினார்.

 

தாரணி இளங்கோவன் பல் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றுள்ளார். தனது குடும்பத்தில் யாரும் மருத்துவர் இல்லை என்பதால் மருத்துவத்துறையைத் தேர்வு செய்ததாக தெரிவித்தார்.

 

 

கணக்கியல் துறையில் பட்டம் பெற்றிருக்கும் சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த கமலேஷ் தியாகராஜன் தான் ஆறுமுகப்பிள்ளை தமிழ்ப்பள்ளியில் ஆரம்ப கல்வியை பயின்றதாக பெற்றோரின் ஊக்குவிப்பால் தான் இத்துறையை தேர்வு செய்ததாக கூறினார்.

 

லாவண்யா கோனார்சிகரன் கூறுகையில் நானும் எனது சகோதரும் ஒரே நேரத்தில் பட்டம் பெறுவது மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார். தனக்கு பியோதெரபி துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் இத்துறையை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.

 

குடும்ப நலன் மருந்து ஸ்பெலிஸ்ட் டாக்டர் அனு சூரியா கணேசன் பிரசித்தி பெற்ற முன்னாள் மாணவர் வேந்தர் விருதினை பெற்றுள்ளார். பெற்றோர், கணவர் மற்றும் என் பிள்ளைகளின் ஆதரவினால் இந்த விருதினை பெற முடிந்ததாக கூறினார்.  அதே வேளை அவரின் உறவினர் சத்தியம் லட்சணா பொறியியல் துறையில் பிரசித்தி பெற்ற முன்னாள் மாணவர் வேந்தர் விருதினை பெற்றுள்ளார். தற்பொழுது எஸ்எம்ஐ குழுமத்தின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வரும் இவர் குடும்பத்தாரின் ஆதரவினால் தன்னால் இந்த நிலைக்கு உயர முடிந்ததாகத் தெரிவித்தார்.

மஞ்சோங்கை சேர்ந்த ஹரிஷரன் மாசிலாமணி மருத்துவத் துறை பட்டம் பெற்றுள்ளார். 3 சகோதர்களில் இரண்டாவது சகோதரரான இவர் தனது குடும்பத்தில் தான் முதல் டாக்டர் என்றும் என்னுடைய இந்த வெற்றிக்கு பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உறுதுணையாக இருந்ததாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here