மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் லோரி ஓட்டுநர் கைது

ஷா ஆலம்: மூன்று நாட்களுக்கு முன்பு (ஜூன் 7) கிள்ளானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். லோரி ஓட்டுநராக பணிபுரியும் 31 வயதுடைய நபர், அதே நாளில் கைது செய்யப்பட்டு ஜூன் 14 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தென் கிள்ளான் காவல்துறைத் தலைவர் சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

ஜூன் 7 ஆம் தேதி காலை 8 மணியளவில் அந்த நபரின் இளைய சகோதரரிடமிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்ததாக சா கூறினார். சகோதரரின் மனைவி 28 வயது, படுக்கையில்  உடலில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக அவர் கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதில் இருந்து தம்பதியினர் பிரச்சினைகளை அனுபவித்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார். இந்த தம்பதிக்கு ஆறு மாத குழந்தை உள்ளது.

பிரேதப் பரிசோதனையில் முகம், கழுத்து, தோள்கள், கைகள், விரல்கள் மற்றும் தலை உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் 12 வெட்டுக் காயங்கள் இருப்பதாக சா மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here