ஜெய்ன் ரய்யான் பெற்றோரின் தலைவிதி நாளை தெரியும்

படுகொலை செய்யப்பட்ட ஆட்டிஸம் சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதினின் பெற்றோரின் தலைவிதி வியாழக்கிழமை (ஜூன் 13) அறியப்படும். ஜெய்னின் தந்தையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஃபஹ்மி அப்துல் மொயின், குழந்தையின் பெற்றோருக்கான இரண்டாவது தடுப்புக் காலம் வியாழன்  முடிவடையும் என்றும், அவர்கள் 13 நாள் ரிமாண்ட் கால வரம்பை அடைந்துவிட்டதால் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

நாளை (ஜூன் 13) தடுப்பு காவலின் கடைசி நாளான 13ஆவது நாளாகும். நாளை முடிவுகள், விசாரணைப் பத்திரங்கள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் வந்துவிட்டன என்று நான் நம்புகிறேன். அவர்கள் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவார்களா அல்லது குற்றம் சாட்டப்படுவார்களா என்பதைப் பார்ப்பார்கள். காத்திருப்போம். மறைந்த ஜெய்ன் ரய்யான் மற்றும் அவரது பெற்றோருக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று அவர் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்ற லாபியில் சந்தித்தபோது கூறினார்.

ஜெய்ன் ரய்யானின் பெற்றோர் தற்போது இரண்டாவது ஆறு நாள் காவலில் உள்ளனர். இது வியாழக்கிழமை (ஜூன் 13) முடிவடைகிறது. சிலாங்கூர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மே 31 அன்று கைது செய்யப்பட்ட தம்பதியினர், கொலைக் குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் போலீஸ் விசாரணைக்கு உதவுவதற்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி, டாமன்சரா டாமாய், அபார்ட்மென்ட் இடமான் அருகே உள்ள ஓடையில் ஆறு வயது ஜெய்ன் ரய்யான் இறந்து கிடந்தார். நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் அடிப்படையில், கழுத்து மற்றும் உடலில் காணப்பட்ட காயங்களின் அடிப்படையில் ஆறு வயது சிறுவன் கொலை செய்யப்பட்டதாக

முன்னதாக புதன்கிழமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஜெய்ன் ரய்யானின் பெற்றோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் ஆட்சேபனையை பதிவு செய்தது. செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் மஹ்மூத் ஜுமாத், காவல்துறை தாக்கல் செய்த விண்ணப்பத்தின் காரணமாக சாட்சியச் சட்டத்தின் 26(1) பிரிவின் கீழ் ஆட்சேபனை செய்யப்பட்டுள்ளது என்றார். புதன்கிழமையன்று மாஜிஸ்திரேட் ஜாஃப்ரான் ரஹீம் ஹம்சா முன் தனது கட்சிக்கரரான ஜெய்னின் தாயார் வாக்குமூலம் அளித்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here