சுஹாகாம் தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்: குலசேகரன்

கோலாலம்பூர், மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகாம்) தலைவரைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் செயல்முறை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதாக  சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த துணை அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார். அவருக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்கு கமிஷன் அனுமதி அளித்த இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்டு 31 அன்று ரஹ்மத் முகமட் ராஜினாமா செய்ததில் இருந்து அந்த பதவி காலியாக உள்ளது.

இன்று மக்களவையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழு ஜூன் 7ஆம் தேதி கூடியது. அதில் தலைவர் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்று சுஹாகாம் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.  புதிய தலைவரை நியமிக்கும் பணி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் பெயர் அறிவிக்கப்படும்  என்றார் அவர். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான சுஹாகாமின் வருடாந்திர அறிக்கைகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் குறித்து மக்களவை விவாதித்து வருகிறது. இதன் போது புதிய தலைவரை நியமிப்பதில் தாமதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

முன்னாள் தலைவர் ரஹ்மத், தலைமை உதவிச் செயலாளர் பதவிக்கு குறிப்பிட்ட வேட்பாளரை நியமிப்பதில் செல்வாக்கு செலுத்தும் வகையில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஊழியர் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஊடகப் பேட்டியில் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அனைத்து முடிவுகளும் சுஹாகாம் ஆணையாளர்களின் உடன்படிக்கையுடன் எடுக்கப்பட்டதாகக் கூறினார். எவ்வாறாயினும், ஆணைக்குழு உறுப்பினர்களை உள்ளடக்காத ஒரு சுயாதீனமான உள்ளக விசாரணையை அனுமதிக்கும் வகையில் வழக்கு கைவிடப்பட்டதாக சுஹாகாம் பின்னர் அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here