நூர் ஃபரா கர்தினி அப்துல்லாவை கொலை செய்ததாகக் கூறப்படும் நபர் மீது நாளை காலை 9 மணிக்கு கோல குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான், அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்த பிறகு, சந்தேக நபர் மீது குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றம் சாட்டப்படும் என்றார்.
விசாரணை அறிக்கை முடிக்கப்பட்டு அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. சந்தேகநபர் மீது 302ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் குற்றஞ்சாட்டுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 10 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஃபரா கர்தினி, ஜூலை 15 ஆம் தேதி மாலை உலு சிலாங்கூரில் உள்ள கம்போங் ஸ்ரீ கிளெடாங்கில் உள்ள செம்பனை தோட்டத்தில் இறந்து கிடந்தார். வாடிக்கையாளருக்கு வாடகை காரை டெலிவரி செய்துவிட்டு காணாமல் போனார். பேராக்கில் உள்ள சிலிம் ரிவர் காவல் நிலையத்தைச் சேர்ந்த லான்ஸ் கார்ப்ரல் சந்தேக நபரை போலீசார் பின்னர் கைது செய்தனர்.








