மலாக்காவில் லஞ்சம் வாங்கியதாக அரசு துறை இயக்குனர் உட்பட 4 பேர் கைது

மலாக்காவில் ஒப்பந்தப் பணிகள் தொடர்பான கொடுப்பனவுகளுக்கான அனுமதிக்கு தூண்டுதலாக 177,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் 50 வயதான அரசுத் துறை இயக்குநரும் அவரது துணையும் அடங்குவர். கைது செய்யப்பட்ட நால்வரும் 34 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதோடு அதில்  ஒரு பெண்ணும் அடங்குவார்.

மற்ற இரண்டு நபர்கள் ஒப்பந்தங்களை வழங்கிய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பப்படுகிறது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை 5 மணியளவில் அலையில் உள்ள எம்ஏசிசி மாநில தலைமையகத்தில் வாக்குமூலங்களைப் பதிவுசெய்வதற்காக அவர்கள் நான்கு பேரையும் மேலாக்கா எம்ஏசிசி கைது செய்தது.

நான்கு பேரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மலாக்கா எம்ஏசிசி இயக்குனர் ஆதி சுபியான் ஷஃபி கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். எம்ஏசிசி சட்டம் 2009ன் பிரிவு 18ன் கீழ் அவர்கள் நால்வரும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here