தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் கிரீம்கள், லோஷன்களை பயன்படுத்தாதீர்; மருத்துவர் ஆலோசனை

கோலாலம்பூர்: தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுய சிகிச்சையை முயற்சிக்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிரீம்கள், லோஷன்கள் அல்லது பற்பசைகளைப் பயன்படுத்தக்கூடாது.  ஏனெனில் இது சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதோடு குணமடைவதை தாமதப்படுத்தும் என்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

ஸ்தாப்பாக் கொலம்பியா ஆசியா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுத் தலைவர்  டி. சுபாஷ், இதுபோன்ற பொருட்கள் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்றவை அல்ல என்று கூறினார். சரியான அறிவுரை இல்லாமல் சுய சிகிச்சைக்கு எதிராக நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன்.

தீக்காயத்தில் இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்துவது காயத்தை சுத்தம் செய்வதை மிகவும் கடினமாக்கும் மற்றும் தொற்று அபாயத்தை அதிகரிக்கும் என்று அவர் பெர்னாமா வானொலியில் அடிப்படை அவசர உதவியின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கும் போது கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் தீக்காயத்தின் தீவிரத்தைக் குறைக்கும் வகையில் 15 முதல் 30 நிமிடங்களில் பாதிக்கப்பட்ட பகுதியை குழாய் நீரில் கழுவ வேண்டும்  என்று அவர் பரிந்துரைத்தார். முதல் மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு, மருத்துவ உதவியை நாடுவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமான, ஈரமான துணியால் சுற்றி வைக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here