குடிநுழைவுத் துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலம்: கடந்த ஆண்டு KLIA டெர்மினல் 2 இல் ஒன்பது வெளிநாட்டினரை நாட்டிற்குள் அனுமதிக்க குடிநுழைவுத் துறை அதிகாரிக்கு 5,650 ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாக மியான்மர் நாட்டவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 37 வயதான ஃபோ சோ, நீதிபதி அனிதா ஹருன் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

மியான்மரைச் சேர்ந்த ஒன்பது பேரை முறையான சோதனைகளுக்கு உட்படாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதற்காக KLIA டெர்மினல் 2 இல் நிலைகொண்டிருந்த அதிகாரிக்கு இலஞ்சம் வழங்கியதாக எலக்ட்ரீஷியன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அக்டோபர் 31, 2023 அன்று பிற்பகல் 3.55 மணியளவில் சிப்பாங் கம்போங் பஹாரு லஞ்சூட், இந்தா புத்ரியில் உள்ள உணவக வளாகத்தில் அவர் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையச் சட்டம் 2009 இன் பிரிவு 16(b)(B) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. சட்டத்தின் பிரிவு 24(1) இன் கீழ் இது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்ச அபராதம் 10,000 ரிங்கிட் அபாரதம்  ஆகியவை விதிக்கப்படலாம்.

வழக்கறிஞர்  உங்கு இம்ரான் அத்தாரி, ஃபோ தனது முதல் குற்றம் என்று கூறப்படுவதால் ஜாமீன் வழங்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை கோரினார். 18 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் ஃபோ, விசாரணை முழுவதும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தார் என்றார்.

அனிதா ஒரு நபர் உத்தரவாதத்துடன் 70,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயம் செய்ததோடு ஃபோ அவரது கடப்பிதழை ஒப்படைக்க உத்தரவிட்டார். வழக்கின் தீர்வு நிலுவையில் உள்ள ஒவ்வொரு மாதமும் MACC அலுவலகத்தில் தன்னைத் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார்.

கடந்த வாரம், MACC தலைமை ஆணையர் அஸாம் பாக்கி, சில அமலாக்க அதிகாரிகளால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கும்பல் ஏஜென்சி முறியடித்ததாகக் கூறினார்.  இது முறையான ஆய்வுகள் இல்லாமல் வெளிநாட்டினரை நாட்டிற்குள் அனுமதித்தது. KLIA இன் டெர்மினல் 2ல் நியமிக்கப்பட்ட ஐந்து அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேரை எம்ஏசிசி தடுத்து வைத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here