GISBHயுடன் இணைக்கப்பட்ட உணவகம் கால்கள், தாடி கழுவிய நீர் கலந்த உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறதா?

குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் (GISBH) உடன் இணைக்கப்பட்ட உணவகத்தின் பல தொழிலாளர்கள், நிறுவனத்தின் தலைவர்களின் கால்கள், தாடிகள் மற்றும் பிற பாகங்களின் முடிகளை கழுவிய நீர் கலந்த உணவை வாடிக்கையாளர்களுக்கு வழஙகுவதாக கூறுவதை மறுத்துள்ளனர்.  ஒரு முகநூல் வீடியோவில், கோலாலம்பூரில் உள்ள சுங்கை பென்சாலாவில் உள்ள இக்வான் டிலைட்ஸ் உணவக நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்தனர்.

எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதை நாங்கள் மறுக்கிறோம். அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் பெயரால் சத்தியம் செய்வதன் மூலம் நாங்கள் இதை உறுதிப்படுத்துகிறோம், அவர்கள் பொய் சொன்னால் கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். என்ன நடக்கிறது என்பதை (GISBH) பொதுமக்கள் தாங்களாகவே தீர்ப்பார்கள் என்று நம்புவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, GISBH உடன் இணைக்கப்பட்டுள்ள சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள   நூர் உணவகத்தில்  கால்கள், தாடி மற்றும் பிற உடல் முடிகளை ஊறவைக்கப் பயன்படும் நீர் கலந்த உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக சினார் ஹரியன் தெரிவித்திருந்தது.

GISBH தொடர்பான சர்ச்சைகளால் தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். எப்ஃஎம்டியின் சோதனை அடிப்படையில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளை இயக்கும் GISBH இன் துணை நிறுவனங்கள், நிறுவனத்தின் தலைவர்களின் கால்கள், தாடி உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் உள்ள முடிகளை கழுவிய தண்ணீரைக் கொண்ட பொருட்களை விற்பனை செய்வதாக நெட்டிசன்கள் கூறினர். கடந்த புதன் கிழமை, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள 20  சமூக நல இல்லங்களை போலீசார் சோதனை செய்தனர்.

402 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 13 பேர் ஆண்  சிறுவர்களுக்கு ஓரின புணர்ச்சி எவ்வாறு  செய்வது குறித்து கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு உஸ்தாஸ் மற்றும் ஒரு விடுதி வார்டன் ஆகியோர் அடங்குவர்.

சனிக்கிழமையன்று, GISBH தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் அலி, கடந்த காலங்களில் அமைப்பினுள் ஓரின புணர்ச்சி  வழக்குகள் நடந்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் நிறுவனம் அதன் சமூக நல இல்லங்களில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு மாறுபட்ட போதனைகளை வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here