மகனை பெல்ட்டால் அடித்து பலத்த காயத்தை ஏற்படுத்திய தந்தை கைது

கோத்த கினபாலு: தனது ஏழு வயது மகனை பெல்ட்டால் (வார் பட்டை) காயப்படுத்தியதாகக் கூறப்படும் 29 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமையன்று சிறுவனின் உடலில் பலத்த காயங்களுடன் இருந்த சிறுவன் குறித்து அவரின் அத்தை அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து தந்தை செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக தவாவ் காவல்துறைத்தலைவர் ஜாஸ்மின் உசேன் தெரிவித்தார்.

சந்தேக நபர் மைல் 3, ஜாலான் அபாஸில் மதியம் 12.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஏசிபி ஜாஸ்மின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். புகார்தாரரின் கூற்றுப்படி, அவரது மருமகன் பெல்ட்டால் தாக்கப்பட்டார். ஏசிபி ஜாஸ்மின் கூறுகையில், குழந்தையை அடிக்கடி தந்தை அடித்ததாக கூறப்படுகிறது. நாங்கள் குழந்தையை மீட்டுள்ளோம் மற்றும் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெல்ட்டைக் கைப்பற்றினோம் என்று அவர் மேலும் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 324 மற்றும் 326A பிரிவின் கீழ் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம், பிரம்படி அல்லது இரண்டு தண்டனையும் வழங்கப்படலாம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here