கண்ணனூர் துணை கலெக்டர் தற்கொலை விவகாரம்; மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அதிரடி நீக்கம்

கண்ணனூர்:

கேரளா, கண்ணனூர் மாவட்ட துணை கலெக்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமான நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கேரளாவின் கண்ணனூர் துணை கலெக்டர் நவீன் பாபுவின் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றவர்கள், புகழ்ந்து பேசி அவரது செயல்பாடுகளை நினைவுகூர்ந்தனர். ஆனால், இந்த நிகழ்வில் அழையா விருந்தாளியாக பங்கேற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.பி.திவ்யா, நவீன் பாபு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதனால், மனமுடைந்து போன நவீன் பாபு, கடந்த 15ம் தேதி, தான் தங்கியிருந்த குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here