ஈப்போ:
நேற்று மாலை தைப்பிங் அருகே தெற்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையின் 230.3 ஆவது கிலோமீட்டரில் சுற்றுலாப் பேருந்து ஒன்று டிரெய்லரின் பின்புறத்தில் மோதியதில், 11 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் உள்ளூர் ஓட்டுநர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி மற்றும் மூன்று ஆண்கள் மற்றும் எட்டு பெண்களைக் கொண்ட 11 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்று, பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.
காயமடைந்தவர்களை பேருந்தில் இருந்து வெளியேற்றி, ஆரம்ப சிகிச்சையளித்து, பின்னர் தைப்பிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.









