KLIAவில் முகப்பிட சேவை தொடர்பான வழக்கு; இரண்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்படும் – அஸாம்

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (MACC) ஆதாரத்தின் படி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA)  வெளிநாட்டினரை சட்டவிரோதமாக அழைத்து வரும்  திட்டம் தொடர்பாக இரண்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாகி கூறுகையில், மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் இரண்டு அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர முடிவு, துணை அரசு வழக்கறிஞரிடம் (டிபிபி) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், இந்த மாதம் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படலாம் அல்லது வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று திங்கள்கிழமை (டிசம்பர் 9) அனைத்துலக ஊழல் எதிர்ப்பு தினத்தின் நிறைவு விழாவில் அவர் கூறினார்.

முன்னதாக, குடிநுழைவுத் துறைக்குள் 11 முக்கிய பிரச்சனைகள் மற்றும் பலவீனங்களை எம்ஏசிசி கண்டறிந்தது. இது ‘முகப்பிட செட்டிங்’ முறையின் மூலம் வெளிநாட்டினரை அழைத்து வருவதற்கான வாய்ப்புகளை கும்பல்களுக்கு உருவாக்கியது. அஸாமின் கூற்றுப்படி, முக்கிய பிரச்சினையானது நடவடிக்கைகளின் போது உள் கட்டுப்பாடுகள் குறைவாக இருப்பதால், குடிநுழைவு அதிகாரிகளை கும்பல் முகவர்களின் அணுகுமுறைகளால் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here