உலக செஸ் சாம்பியன் குகேஷ் சற்றுமுன் சென்னை வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கின்றார் குகேஷ்.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் குகேஷ் வெற்றிபெற்றார்.
அவரை எதிர்த்து விளையாடிய டிங் லிரன்னை வீழ்த்தி மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை நிகழ்த்தினார் குகேஷ். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் குகேஷ் போராடி வெற்றிபெற்றார். வெற்றிபெற்றவுடன் ஆனந்த கண்ணீர் சிந்திய குகேஷின் விடியோக்கள் இணையத்தில் வைரலானது.
அதன் பிறகு உலக செஸ் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை நிகழ்த்தி காட்டினார் குகேஷ். 18 வயதில் குகேஷ் இந்த சாதனையை குகேஷ் நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் இறுதிப்போட்டியில் வென்ற குகேஷிற்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அவருக்கு 11 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்று குகேஷ் சென்னை வந்தடைந்தார். அவரின் வருகையை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஏர்போட்டில் காத்துகொண்டு இருந்தனர். மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் விளையாட்டு துறையை சார்ந்தவர்களும் அவரை வரவேற்க ஏர்போட்டிற்கு வந்தனர்.
குகேஷ் சிறு வயதில் விஸ்வநாதன் ஆனந்தின் அகாடெமியில் தான் பயிற்சி பெற்றார் என சொல்லப்படுகின்றது. 18 வயதில் நாட்டுக்காக பெருமையை தேடி தந்த குகேஷை பாராட்டாத ஆளே இல்லை எனலாம். பிரதமர் முதல் முதல்வர் வரை அனைவரது பாராட்டையும் பெற்றார் குகேஷ். இதைத்தொடர்ந்து குகேஷ் பல விழாக்களில் கலந்துகொள்ள இருக்கின்றார்.அதுமட்டுமல்லாமல் அவருக்கு பல விருதுகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.