காப்பீட்டு இழப்பீடு பெறுவதற்காக தன்னிடம் திருடப்பட்டதாக பொய் புகார் அளித்த பொறியாளர் கைது

ரெம்பாவ், காப்பீட்0டு இழப்பீடு பெறுவதற்காக தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், சொகுசு ஃஆடி கார் திருடப்பட்டதாகவும் பொறியாளர் போலிஸ் புகார் அளித்துள்ளார். 42 வயதான அந்த நபர் சனிக்கிழமை (டிசம்பர் 21) அதிகாலை 3.14 மணிக்கு புகார் அளித்ததாக ரெம்பாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஷேக் அப்துல் காதர் ஷேக் முகமது தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) இரவு 10.22 மணியளவில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தன்னைத் தடுத்து நிறுத்தி, தனிப்பட்ட பொருட்களைக் கொள்ளையடித்து, ஃஆடி எடுத்துச் சென்றதாக அந்த நபர் புகார் அளித்தார். எவ்வாறாயினும், காப்பீடு கோருவதற்காக அவர் பொய்யான அறிக்கையை செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) காலை 11.45 மணியளவில் பெடாஸில் உள்ள ஒரு உணவகத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 182 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இது அதிகபட்சமாக ஆறு மாத சிறைத்தண்டனை 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டும் விதிக்கப்படும்.

ரெம்பாவில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றங்களைப் பரிந்துரைப்பதன் மூலம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், பொய்யான போலீஸ் புகாரினை பதிவு செய்ய வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற புகார்களை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here