வெளிநாட்டு குடும்பத்திடம் கொள்ளையடிக்க போலீஸ்காரர் போல் காட்டிக் கொண்டவர் கைது

‍ஷா ஆலம்: சனிக்கிழமை (ஜனவரி 4) இங்கு அருகிலுள்ள மேரு, கிளாங்கில் வெளிநாட்டு குடும்பத்திடம் கொள்ளையடிப்பதற்கு முன்பு போலீஸ்காரர் போல் காட்டிக் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிள்ளான் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எஸ். விஜய ராவ், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்குள் நுழைந்து, தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கைது செய்வதைத் தவிர்க்க 4,000 ரிங்கிட்டை கொடுக்குமாறு கோரினார். அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்த, பாதிக்கப்பட்டவர்கள் 23 வயதான சந்தேக நபரிடம் இரண்டு தங்க மோதிரங்கள் மற்றும் கையடக்க தொலைபேசியை ஒப்படைத்தனர்.

பொருட்களைப் பெற்ற பிறகு, சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். அவர் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் அதிகாலை 1.24 மணிக்கு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) அறிக்கையில் தெரிவித்தார்.

திருடப்பட்ட பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 392 மற்றும் 170 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காவல்துறை அதிகாரிகளைப் போல பாவனை செய்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் விஜய ராவ் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here