அஸலினா சதி செய்ததாக கூறிய கைரி மீது போலீஸ் புகார்

நஜிப் ரசாக்கிற்கான மன்னிப்பு உத்தரவின் கூடுதல் ஆவணத்தை “மறைக்க” சட்ட, நிறுவன சீர்திருத்த அமைச்சர் சதி செய்ததாக அஸாலினா ஓத்மானின் உதவியாளர் முன்னாள் அம்னோ தலைவர் கைரி ஜமாலுதீனுக்கு எதிராக  காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அஸாலினாவின் அரசியல் செயலாளரான சுரயா யாக்கோப், செந்தூலில் ஒரு போலீஸ் புகாரை பதிவு செய்து, முன்னாள் அம்னோ இளைஞர் தலைவரான கைரியை விசாரிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். கைரியின் கூற்று பொய்யானது மட்டுமல்ல, அஸலினாவின் படத்தையும் கொச்சைப்படுத்தியதாக அவர் கூறினார், சினார் ஹரியன் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சரான கைரி, முன்னாள் அம்னோ தகவல் தலைவர் ஷஹரில் ஹம்தானுடன் இணைந்து நடத்தும் கெலுார் செகேஜாப் போட்காஸ்டில் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

திங்களன்று, நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவை நிறைவேற்ற அரசாங்கத்தை நிர்பந்திக்க நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி பெற்றார்.

முன்னாள் மாமன்னர் வழங்கிய கடிதத்தை மூடிமறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்துள்ளது. உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், நஜிப் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் எந்த ஒரு கூடுதல் அல்லது உத்தரவையும் அவரது அமைச்சகம் பெறவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here