ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மாயம் – தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கும் போலீசார்

சிப்பாங்: முகாமில் தங்கியிருந்த போது மாயமாகி இருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். காணாமல் போயிப்போர் கணவன், மனைவி, அவர்களின் மூன்று குழந்தைககள்  என  37 வயது பெண்ணின் இளைய சகோதரர்  காணாமல் போயிருப்பதாக புகார் அளித்ததாக சிப்பாங் காவல்துறைத் தலைவர் நோர்ஹிசாம் பஹாமன் தெரிவித்தார்.

ஜனவரி 17 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சாம்பல் நிற பெரோடுவா அல்சாவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு குடும்பம் வெளியேறியதாக புகார்தாரர் கூறினார். இன்று தனது சகோதரியிடமிருந்து ஒரு வீடியோ கிளிப்பைப் பெற்றார். அதில் குடும்பம் பாதுகாப்பாகவும் குறிப்பிடப்படாத முகாமில் இருப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், புகார்தாரரின் சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். குடும்பத்தின் காணாமல் போனது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here